Published : 23 Oct 2022 08:47 AM
Last Updated : 23 Oct 2022 08:47 AM

ப்ரீமியம்
கு.அழகிரிசாமியின் சிறார் கதைகள்!

விஷ்ணுபுரம் சரவணன்

கு.அழகிரிசாமி என்றதுமே, அவரின் ‘அன்பளிப்பு’ கதையில் வரும் சாரங்கனின் பெயரே பலரின் நினைவுக்கு வரும். இன்னும் சிலருக்கு, ‘ராஜா வந்திருக்கிறார்’ சிறுகதையில் இடம்பெற்ற சிறுவர்கள் கண்முன் வந்து செல்லலாம். இப்படி, ஓர் எழுத்தாளரின் முதன்மையான நினைவுகளாக அவர் உருவாக்கிய குழந்தைக் கதாபாத்திரங்கள் இருப்பது, இலக்கியச் சூழலில் அபூர்வமே.

பெரியவர்களுக்கான கதையில் சிறுவர்களை வலம்வர வைத்தது மட்டுமல்லாமல், குழந்தைகளுக்கு என்றே கதைகளை எழுதியிருக்கிறார் அழகிரிசாமி. ‘மூன்று பிள்ளைகள்’, ‘காளிவரம்’ ஆகிய நூல்கள் அவரின் குழந்தை இலக்கியப் படைப்புகள் எனத் தெரியவந்துள்ளன. ஆனால், அவை இரண்டுமே தற்போது அச்சில் இல்லை. அவரின் மொத்த படைப்புகளாக வெளிவந்திருக்கும் நூல்களில் அவை இடம்பெறவும் இல்லை. நீண்ட தேடலுக்குப் பிறகு சென்னை ரோஜா முத்தையா நூலகத்தில் ‘மூன்று பிள்ளைகள்’ நூலைக் கண்டெடுத்தேன்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x