Published : 23 Oct 2022 09:58 AM
Last Updated : 23 Oct 2022 09:58 AM

ப்ரீமியம்
இலங்கை உள்நாட்டுப் போர் குறித்த நாவலுக்கு புக்கர் பரிசு

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் ஷேகன் கருணாதிலக, ‘தி செவன் மூன்ஸ் ஆஃப் மாலி அல்மெய்தா’ என்கிற தன்னுடைய இரண்டாவது நாவலுக்காக இந்த ஆண்டுக்கான புக்கர் பரிசைப் பெற்றுள்ளார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை மையமாகக் கொண்டது இந்நாவல். இதன் முதன்மைக் கதாபாத்திரமான அல்மெய்தா ஒரு ஒளிப்பட இதழாளர். அவர் இறந்துவிட்ட பிறகு பூவுலகில் வாழும் தனது நண்பர்களைத் தொடர்புகொள்வதற்கான வாய்ப்பு ஏழு நாட்களுக்கு அவருக்குக் கிடைக்கிறது. அவர்களின் மூலமாக மறைத்துவைக்கப்பட்டிருக்கும் தன்னுடைய ஒளிப்படங்களை மீட்டெடுத்து இலங்கைப் போர்க் குற்றங்களை அவர் அம்பலபடுத்துகிறார். “வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான சாகசம் நிறைந்த பயணத்தை வாசகருக்கு அளிக்கும் இந்த நூல், அதன் வழியாக உலகின் இருண்மையான இதயம் என்று ஆசிரியரால் அழைக்கப்படும் இடத்துக்கு அழைத்துச்செல்கிறது” என்று விருதுத் தேர்வுக் குழுவின் தலைவர் நீல் மெக்கிரெகோர் கூறியுள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x