Published : 19 Oct 2022 06:49 AM
Last Updated : 19 Oct 2022 06:49 AM

ப்ரீமியம்
சொல்... பொருள்... தெளிவு | மாறுபட்ட தீர்ப்பு என்றால் என்ன?

கர்நாடக மாநிலத்தின் கல்வி நிலையங்களில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரலாமா, கூடாதா என்கிற வழக்கு இரண்டு நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வினால் விசாரிக்கப்பட்டது. ஹிஜாப் அணிவதற்கான மாணவி ஒருவரின் உரிமைக்கும் பள்ளிக்கூடங்களில் மதச்சார்பின்மையைப் பேண வேண்டும் என்னும் அரசின் விருப்பத்துக்கும் இடையிலான மோதலை இரண்டு நீதிபதிகளைக் கொண்ட அந்த அமர்வால் தீர்த்து வைக்க முடியவில்லை.

இந்த வழக்கில் அக்டோபர் 13 அன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மாறுபட்டதாக இருந்தது. முன்னதாகக் கர்நாடக அரசு மார்ச் 15 அன்று கல்வி நிலையங்களில் பரிந்துரைக்கப்பட்ட சீருடையைத் தவிர, ஹிஜாப் உள்ளிட்டவேறெந்த ஆடையையும் அணிந்துவருவதற்குத் தடைவிதித்திருந்தது. அதற்கு எதிராக ஹிஜாப் அணியும் மாணவிகள் தொடர்ந்த வழக்கில், கர்நாடக உயர் நீதிமன்றம் மாநில அரசின் தடை உத்தரவு செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தது. இந்தத் தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி ஹேமந்த் குப்தா, ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதிசெய்தார். மற்றொரு நீதிபதியான சுதான்ஷு தூலியா கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்துசெய்தார். இந்நிலையில், இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் வழிகாட்டுதலின்படி அமையும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x