Published : 07 Oct 2022 06:55 AM
Last Updated : 07 Oct 2022 06:55 AM

ப்ரீமியம்
கிராம சபைத் தீர்மானங்கள்: மெய்ப்படுவதும் முக்கியம்!

உள்ளாட்சிகளின் ஜனநாயகப் பண்பைத் தக்கவைப்பதற்குப் பெரும் வாய்ப்பளிக்கும் கிராம சபைக் கூட்டங்கள், சமீப காலமாகச் சடங்குபோல் நடைபெற்றுவருவது, அவற்றின் நோக்கத்தையே நீர்த்துப்போக வைப்பதாக உள்ளது. உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்த நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்புவரை அதிகாரிகள் மட்டுமே கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றுவந்தனர்.

2020 ஜனவரி 26 அன்று உள்ளாட்சி அமைப்புக்குப் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்றனர். அந்தந்தக் கிராமங்களின் சமூகப் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் தீர்மானங்கள், தீர்க்கப்படும் நோக்கில் கிராம சபையில் அனைத்துத் தரப்பினர் முன்னிலையிலும் நிறைவேற்றப்படுகின்றன. ஆனால், தீர்க்கப்படாமல் மீண்டும் மீண்டும் தீர்மானங்கள் பலமுறை நிறைவேற்றப்படுவது, எளிய மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையிலேயே உள்ளது. திருப்பூர் மாவட்டம் இடுவாய் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மக்களுக்கு இடையூறாக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக் கோரி, 2020-க்குப் பிறகு, ஏழு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், கடை இன்னும் அகற்றப்படவில்லை. பழையகோட்டைப்புதூர் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் 172 மாணவர்கள் படித்துவருகின்றனர். அவர்கள் 8ஆம் வகுப்புக்குப் பிறகு உயர்நிலை, மேல்நிலைக் கல்வி பயில வெளியூர்தான் சென்றாக வேண்டும். நடுநிலைப் பள்ளியை, உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப் பல முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டும், அது நடைமுறைக்கு வரவில்லை.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x