Last Updated : 07 Oct, 2022 06:50 AM

 

Published : 07 Oct 2022 06:50 AM
Last Updated : 07 Oct 2022 06:50 AM

ப்ரீமியம்
புரட்சியின் புஞ்சிரி முகம்

தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன் கடந்த வாரம் காலமாகிவிட்டார். கேரளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பலப்படுத்தியதில் இவரது பங்கு குறிப்பிடத்தகுந்தது. கேரளத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் சக்திமண்டலமான கண்ணூருக்கு அருகில் கொடியேரியில்பிறந்தவர் பாலகிருஷ்ணன். பள்ளிக் காலத்தில் மாணவர் அமைப்பின்வழி தன் அரசியல் செயற்பாட்டைத் தொடங்கினார். 1973இல் மாணவர் அமைப்பான எஸ்.எஃப்.ஐயின் மாநிலச் செயலாளரானார். காங்கிரஸின் மாணவர் அமைப்பான கே.எஸ்.யூ. மிக வலுவாக இருந்த காலகட்டத்தில் தன் ஒருங்கிணைப்பில் எஸ்.எஃப்.ஐயைத் திடகாத்திரப்படுத்தினார். நெருக்கடிநிலை காலத்தில்எஸ்.எஃப்.ஐ. செயலாளர் என்ற ரீதியில் கைதுசெய்யப்பட்டார். அந்த ஒன்றேகால் வருஷச் சிறைவாசத்துக்குப் பிறகு மார்க்சிஸ்ட் கட்சியில் மதிப்புக்குரிய தோழரானார். நெருக்கடிநிலைக்குப் பிறகு உருவான வெற்றிடத்தைப் பயன்படுத்திக் கட்சியை வலுவாக்கியதில் கொடியேரியின் பங்கு கணிசமானது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x