Published : 30 Sep 2022 07:10 AM
Last Updated : 30 Sep 2022 07:10 AM

ப்ரீமியம்
காம்ரேட் என்.டி.வி.

ப.தங்கப்பன்

தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்த மூவரின் வழக்குகளில் வாதாடியவர் தோழர் என்.டி.வி., என்றறியப்பட்ட என்.டி.வானமாமலை: எம்.ஜி.ஆர் - எம்.ஆர்.ராதா வழக்கில் ராதாவுக்காக வழக்காடியவர்; மு.கருணாநிதி மீதான சர்க்காரியா கமிஷன் வழக்கில் மத்திய அரசின் சார்பாகவும், மத்தியப் புலனாய்வுப் பிரிவுக்காகவும் வாதாடினார்; ஜெ.ஜெயலலிதாவுக்காகவும் வாதாடியுள்ளார்.

இந்திய - ரஷ்ய நட்புறவு: கம்யூனிஸ சித்தாந்தத்தில் பற்றுக்கொண்டிருந்த என்.டி.வி. அரசியல் வேறுபாடுகள் கடந்து அனைவராலும் மதிக்கப்பட்டவர். எம்.ஜி.ஆர். அவரைக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாடாளுமன்றத்துக்கு அனுப்ப வலியுறுத்தினார். ஆனால் என்.டி.வி. அதற்கு இணங்கவில்லை. இந்திய - சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளராக 25 ஆண்டுகள் பணியாற்றியவர். இந்திய–சோவியத் நட்புறவில் கலை, கலாச்சார நிகழ்ச்சிகள் பெரும் பங்கு வகிக்க வேண்டும் என்று என்.டி.வி. விரும்பினார். இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் ‘ரஷ்யக் கலை விழா’ நடக்க அடித்தளமிட்டவர் என்.டி.வி. இன்றைக்கும் ரஷ்யக் கலை விழா நடைபெறுகிறது. இந்திய-சோவியத் கலாச்சார நட்புறவுக் கழகத்தின் கிளை சிந்தாதிரிப்பேட்டையில் 1974இல் தொடங்கப்பட்டது. இந்திய–சோவியத் நட்புறவுக் கழகத்தைத் தமிழ்நாட்டில் மக்கள் இயக்கமாக மாற்றிய சாதனை இவரையே சேரும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x