Published : 29 Sep 2022 07:10 AM
Last Updated : 29 Sep 2022 07:10 AM

ப்ரீமியம்
புதிய மின் கட்டணம்: நன்மைகளும் சிக்கல்களும்

மார்ட்டின் ஷெர்ஃப்லெர், சந்தியா சுந்தரராகவன்

வருடாந்திர மின் கட்டண விகிதம், ஆறு சதவிகிதம் வரை உயர்த்தப்படலாம் எனத் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் (TNERC) சில வாரங்களுக்கு முன் அறிவித்தது. உற்பத்தியாளர்களுக்குக் கொடுக்க வேண்டிய பணத்தைக் கொடுக்க முடியாமல், தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகம் (TANGEDCO) கடனில் உழன்றுகொண்டிருக்கும் நிலையில், முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை வெகுகாலமாக எதிர்பார்க்கப்பட்டதே.

புதிய கட்டணத் திருத்தம் வரவேற்கத்தக்கது. எனினும் கட்டண அமைப்பை வகைப்படுத்தியுள்ள முறை சிக்கலாக இருக்கிறது. வருடந்தோறும் மின் கட்டணம் மறுபரிசீலனை செய்யப்படாமல் போனதே தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்தின் நிதிநிலை மோசமடைந்ததற்கு முக்கியக் காரணம். அதன் காரணமாக, சராசரி வருமானம் சராசரி விநியோகச் செலவுக்கு இடையிலான இடைவெளி அதிகரித்துவிட்டது. பல வருட காலமாக வருமானத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை. பல திட்டங்கள் தாமதப்படுத்தப்பட்டன, ரத்துசெய்யவும் பட்டிருக்கின்றன. இதன் விளைவாக, விநியோக அமைப்பை நவீனப்படுத்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி - பகிர்மானக் கழகத்தின் திறன் வெகுவாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. சீர்மிகு மின் வலைப்பின்னலுக்கு மாறுவதும் தடுக்கப்பட்டிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x