Last Updated : 27 Sep, 2022 07:15 AM

 

Published : 27 Sep 2022 07:15 AM
Last Updated : 27 Sep 2022 07:15 AM

ப்ரீமியம்
பரந்தூர்: ஒரு தொலைநோக்குப் பார்வை

வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்படுகிறபோதெல்லாம் அதனால் ஏற்பட வாய்ப்புள்ள சூழலியல் பாதிப்புகளைச் சொல்லி செயல்பாட்டாளர்கள் எச்சரிக்கிறார்கள். அத்திட்டங்களுக்காக, நிலம் கையகப்படுத்தப்படும்போது தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுவிடுமோ என்று அப்பகுதியில் வாழும் மக்கள் அச்சத்துக்கு ஆளாகிறார்கள். வளர்ச்சிக்கும் சூழலியலுக்கும் இடையிலான உறவு ஒன்றுக்கொன்று எதிரானதாக இருந்துவிடக் கூடாது. இயன்றவரை ஒத்திசைந்துசெல்வதே வளர்ச்சியையும் தாண்டிய மேம்பாட்டுக்கு உதவும்.

பரந்தூர் விமான நிலையத்துக்காக நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதை ஒட்டி சென்னையை மையமிட்டும் இதே சிக்கல்கள் எழுந்துள்ளன. இப்போதும், சூழலியல் பாதிப்பு குறித்து எச்சரிக்கப்படுகிறது; வாழ்வாதாரங்கள் குறித்து அச்சங்கள் தெரிவிக்கப்படுகின்றன. குறிப்பாக, இத்திட்டத்தின் செயல்பாட்டுக்கு உட்பட்ட பெரிய நெல்வாய் ஏரியின் எதிர்காலம் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த ஏரி, ஆழப்படுத்தப்பட்டு தொடர்ந்து அதே நிலையில் பராமரிக்கப்படும் என்று தமிழக அரசால் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, உயர்மட்டத் தொழில்நுட்பக் குழு ஒன்றை அமைக்கவிருப்பதாகவும் அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x