Published : 26 Sep 2022 07:06 AM
Last Updated : 26 Sep 2022 07:06 AM

ப்ரீமியம்
புதிய தொடர்: ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - அச்சமே கீழ்களது ஆசாரம்!

ஆ.சிவசுப்பிரமணியன்

எலிசபெத் மகாராணியின் இறுதி ஊர்வலத்தை நேரலையில் பார்த்தபோது, அந்நாட்டு மக்கள் திரளாகக் கூடிநின்று தம் இரங்கலை வெளிப்படுத்தியது வியப்பில் ஆழ்த்தியது. உலகமயமாக்கச் சூழலில் நிலவுடைமைச் சமூகத்தின் குறியீடுகளான கிரீடம், செங்கோல் போன்றவற்றுடன் அந்நாட்டு மக்கள் கொண்டிருந்த பிணைப்பின் வெளிப்பாடாக மட்டுமின்றி, அம்மக்களுடன் அவர் கொண்டிருந்த நல்லுறவின் அடையாளமாகவும் இதைக் கொள்ளலாம். ஊர்வலக் காட்சி கடந்த கால நிகழ்வுகளுக்குள் என்னை அழைத்துச்சென்றது.

கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊழியர்களாக வந்த ஆங்கிலேயர்கள் ஆட்சியாளர்களாக மாறியபோது, வட்டார ஆட்சியாளர்கள் சிலர் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதை எதிர்த்து அவர்களுடன் போரிட்ட ஆங்கிலேயர்கள் அவர்களைச் சிறைபிடித்ததுடன் விசாரணை என்ற நாடகத்தை நடத்தி, அவர்களுக்கு மரணதண்டனையும் விதித்தனர். இது நிறைவேற்றப்பட்ட பின்னர், உயிர் துறந்தோரின் உடலை என்ன செய்தனர்? உறவினர்களிடம் சடலத்தை வழங்கினார்களா? அல்லது தாமே நல்லடக்கம் செய்தனரா? இக்கேள்விகளுக்கான விடையை மூன்று நிகழ்வுகளின் வழி தேடுவோம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x