Published : 25 Sep 2022 06:00 AM
Last Updated : 25 Sep 2022 06:00 AM

ப்ரீமியம்
உடுமலை நாராயணகவி - பெரியாரின் பாவலர்

யுகபாரதி

திரைப் பாடல்களின் வழியே திராவிட இயக்கக் கருத்துகளை மக்களிடம் கொண்டுசேர்த்த முதல் நபராகவும், அதற்காகத் தம் வாழ்நாளின் பெரும்பகுதியை அர்ப்பணித்தவராகவும் உடுமலை நாராயணகவியை அறிகிறோம்.

திராவிடக் கொள்கைகளை மக்கள் மத்தியில் பெருக்கியதிலும், அதை வரவேற்புக்குரிய சங்கதியாக மாற்றியதிலும் பெரும் பங்கு உடுமலைக் கவிராயருடையது. ஏதோ ஒரு புள்ளியில், அவர் பெரியாரை வந்து சேர்ந்தவரில்லை. அவருடைய இயல்பே அதுவாக இருந்திருக்கிறது. கலையிலும் கல்வியிலும் முத்துச்சாமிக் கவிராயரைக் குருவாகக் கொண்ட நாராயண கவி, தமது அரசியல் ஞானாசிரியனாகக் கருதியது பெரியாரை மட்டுமே. அக்காலத்தில் இருந்துவந்த மூடநம்பிக்கைகளுக்கும் சமூக நீதிக்கு எதிரான செயல்களுக்கும் பெரும் சவாலாக விளங்கிய பெரியார், உடுமலையையும் பாரதிதாசனையும் தமது இயக்கத்தின் கலை இலக்கிய உந்துவிசைகளென்றே எண்ணியிருக்கிறார். எளிய தமிழில் நாராயணகவியும் இலக்கியத் தமிழில் பாரதிதாசனும் எழுதிய கவிதைகளைச் சமமாக மதித்தே, தமது ‘குடியரசு’ பத்திரிகையில் அவர் வெளியிட்டிருக்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x