Published : 25 Sep 2022 06:05 AM
Last Updated : 25 Sep 2022 06:05 AM
‘திருநெல்வேலி ஜில்லாவில், கோவில்பட்டிக்கும் கயத்தாற்றுக்கும் நடுவே, டிரங்க் ரோட்டுக்குக் கிழக்கே இருக்கும் இடைசெவல் என்ற கிராமத்தின் 300 வீடுகளில் ஒன்றில்’ 1923 செப்டம்பர் 23 அன்று கு.அழகிரிசாமி பிறந்தார். ‘புத்தகமும் நோட்டும் வாங்கிக்கொடுக்கச் சக்தி இல்லாமல் பெற்றோர்கள் அவஸ்தைப்பட்ட’ நிலையில் [ . . ] ‘சர்வீஸ் கமிஷன் பரீட்சையில் தேறி சப்ரிஜிஸ்தரார் ஆபிஸ் குமாஸ்தா’ ஆனார் அழகிரிசாமி.
அதற்கு முன்னதாக, 1941, 42இல் தமிழ் இலக்கியப் பத்திரிகைகளை அழகிரிசாமி படிக்க ஆரம்பித்திருந்தார். வேலையில்லாமல் இரண்டு ஆண்டுகள் ஓய்வாக இருந்தபோது, நண்பர்களின் ஊர்களுக்கு நடந்தேசென்று புத்தகங்களை இரவல் வாங்கிக்கொண்டுவந்து படித்திருக்கிறார். ‘இடைவிடாமல் படித்ததன் பலனாக, இலக்கியத்துடன் வெட்டிக்கொண்டு விடுபட முடியாத, அழுத்தமான, ஓர் உறவு’ அழகிரிசாமிக்கு ஏற்பட்டுவிடவே, ஒரு கதையை எழுதி பத்திரிகைக்கு அனுப்புகிறார். அது பிரசுரமாகாததால், ‘சென்னையில் உள்ள அறிவாளிகள் எங்கே, குக்கிராமத்தில் வசிக்கும் நாம் எங்கே?’ என்று ஏமாற்றம் அடைகிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT