Published : 22 Sep 2022 08:21 AM
Last Updated : 22 Sep 2022 08:21 AM

ப்ரீமியம்
‘சிற்பி’ திட்டம் எழுப்பும் கேள்விகள்!

ச.இராமசாமி

மாணவர்களை நல்வழிப்படுத்தும் ‘சிற்பி’ (SIRPI - Students In Responsible Police Initiatives) திட்டத்தை செப்டம்பர் 14 அன்று தொடங்கிவைத்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘சிறுவர்களைச் சமூக ஒழுக்கத்துடன் வளர்ப்பது நம் கடமை’ என்றார்; தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, ‘இத்திட்டத்தில் மாணவர்களுக்குக் காவல் துறையினரால் பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். போதை ஒழிப்பிலிருந்து பல்வேறு நன்னடத்தைகளைக் கற்பார்கள், தங்களைத் தாங்களே மேம்படுத்திக்கொள்வார்கள்’ என்றார்.

சில கேள்விகள்: கல்வித் துறை சார்ந்தும், மாணவர்கள் சார்ந்தும் தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துவருகிறது. அந்த வகையில் புதிய திட்டமாக இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதே நேரம், இந்தத் திட்டம் ஏன் அரசுப் பள்ளி மாணவர்களிடம் மட்டும் தொடங்கப்படுகிறது? இந்தப் போதனைகள் எல்லாமே அரசுப் பள்ளி மாணவர்களுக்கானது மட்டும்தானா? சில நாட்களுக்கு முன் அரசுப் பள்ளிகளில் மட்டும் கடைப்பிடிக்கப்பட்ட போதைப் பொருட்கள் ஒழிப்பு தினம், ஏன் தனியார் பள்ளிகளில் கடைப்பிடிக்கப்படவில்லை? வளரிளம் பருவம் (13 வயது) தொடங்கும்போது அவர்களுக்கு காவல் துறையினர் வழிகாட்ட வேண்டிய அவசியம் என்ன? இதுபோன்ற திட்டங்களை வடிவமைப்பவர்களிடம் வெளிப்படும் குறுகிய பார்வையை எப்படிப் புரிந்துகொள்வது என ‘சிற்பி’ திட்டத்தின் அடிப்படை நோக்கத்திலிருந்து பல்வேறு கேள்விகள் எழுகின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x