Published : 21 Sep 2022 07:10 AM
Last Updated : 21 Sep 2022 07:10 AM

ப்ரீமியம்
சொல்… பொருள்… தெளிவு: இந்தியாவில் பெரும்பூனைகளின் நிலை என்ன?

ஆப்பிரிக்க சிவிங்கிப்புலி

இந்தியத் துணைக்கண்டத்தில் ஆசியச் சிவிங்கிப்புலிகள் அற்றுப்போய் 70 ஆண்டுகளுக்குப் பிறகு, அதன் துணை இனமான ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகள் செப்டம்பர் 17 அன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஆப்பிரிக்காவின் நமீபியாவிலிருந்து 8,000 கி.மீ-க்கு அப்பாலுள்ள இந்தியாவுக்குக் கண்டம்தாண்டிச் சிறப்பு விமானத்தில் கொண்டுவரப்பட்ட எட்டு சிவிங்கிப்புலிகள் (ஐந்து பெண், மூன்று ஆண்), மத்திய பிரதேசத்தின் குனோ தேசியப் பூங்காவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அரசுக் குறிப்புகளின்படி வங்கப் புலி, ஆசியச் சிங்கம், சிறுத்தை, ஆசியச் சிவிங்கிப்புலி என நான்கு பெரும்பூனைகள் முன்பு ஒரே வாழிடத்தைக் கொண்டிருந்த இடமாகக் குனோ திகழ்கிறது. இந்தியாவில் ஆசியச் சிவிங்கிப்புலிகள் உலவிய குஜராத், ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேச மாநிலங்கள் ஆப்பிரிக்கச் சிவிங்கிப்புலிகளை அறிமுகப்படுத்துவதற்கான முன்னுரிமை வாழிடங்களாகப் பார்க்கப்பட்டன. மத்திய இந்திய மாநிலங்களில் ஆய்வுசெய்யப்பட்ட இடங்களுள் மத்திய பிரதேசத்தின் குனோ பல்பூர் தேசியப் பூங்கா இதற்கு ஏற்ற வாழிடமாக அடையாளம் காணப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x