Published : 11 Sep 2022 10:25 AM
Last Updated : 11 Sep 2022 10:25 AM
“நான் படம் எடுப்பதே அரசியல் பேசத்தான்” என்று ஒரு படைப்பாளியாகத் தன்னுடைய நோக்கத்தையும் தன்னை இயக்கும்விசையையும் வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டவர் இயக்குநர் பா.இரஞ்சித். அவர் இயக்கிய, தயாரித்த திரைப்படங்கள் அரசியலுக்கு முக்கியத்துவம் அளித்து, அதை விவாதிப்பவையாக இருந்துள்ளன. அதே நேரம், படத்தில் பேசப்படும் அரசியல் சார்ந்தும் கலை நேர்த்தி சார்ந்தும் அவருடைய திரைப்படங்கள் விமர்சனங்களைத் தொடர்ந்து எதிர்கொண்டுள்ளன. அவருடைய புதிய படைப்பான ‘நட்சத்திரம் நகர்கிறது’ம் இதற்கு விதிவிலக்கல்ல.
ரஞ்சித்தையும் அவருடைய திரைப்படங்களையும் வெறுக்கும் சாதி உணர்வாளர்கள், அவர் படங்களின் மீதான விமர்சனங்களின் பின்னால் ஒளிந்துகொள்ளக்கூடும். அதே நேரம், அவருடைய திரைப்படங்கள் மீதான நியாயமான விமர்சனங்களை முன்வைப்பவர்களைக்கூட, ஆதிக்க சாதி உணர்விலிருந்து விடுபட முடியாதவர்கள் என்று வலிந்து முத்திரைகுத்தும் போக்கும் நிலவிவருகிறது. ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை விமர்சிப்பவர்கள் மீதும் இத்தகைய முத்திரை குத்தப்படுவதைப் பரவலாகச் சமூக ஊடகங்களில் காண முடிகிறது. படத்திலும் இசையமைப்பாளர் இளையராஜாவை அவருடைய இசை அல்லது பொதுவெளிச் செயல்பாடுகளுக்காக விமர்சிப்போர் குறித்து முதன்மைக் கதாபாத்திரமான ரெனே (துஷாரா விஜயன்) வெளிப்படுத்தும் கருத்துகளும் இதே போன்ற முத்திரை குத்தலாக இருப்பதை யதேச்சையானதாகக் கடந்துவிட முடியாது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT