Last Updated : 25 Aug, 2022 07:46 AM

 

Published : 25 Aug 2022 07:46 AM
Last Updated : 25 Aug 2022 07:46 AM

சுதந்திரச் சுடர்கள் | மருத்துவம்: போலியோவை ஒழித்த திட்டம்

போலியோவால் உடல் ஊனமுற்ற பெரியவர்களை இன்றும் நாம் காண முடியும். ஆனால், போலியோவால் ஊனமுற்ற ஒரு குழந்தையைக்கூட நாம் காண முடியாது. அதற்குக் காரணம் 1995இல் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பல்ஸ் போலியோ திட்டம்'.

இளம்பிள்ளைவாதம் என்கிற போலியோமைலிட்டிஸ் ஒரு தீவிரமான தொற்றுநோய். பெரும்பாலும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளையே அது பாதிக்கும்.

இந்த வைரஸ் மனிதரிடமிருந்து மனிதருக்குப் பரவும். 1970-களில் போலியோவால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 50,000 குழந்தைகள் ஊனமுற்றனர்.

இதைக் கட்டுப்படுத்தவே ‘பல்ஸ் போலியோ திட்டம்' தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு உலகளவில் போலியோவால் பாதிக்கப்பட்டோரில், 60 சதவீதம் பேர் இந்தியாவிலிருந்தனர். போலியோ பாதிப்பை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியாது என்பதே உலக நாடுகளின் கணிப்பாக இருந்தது. ஆனால், பல்ஸ் போலியோ திட்டத்தின் கீழ் விரிவான பிரச்சாரம், விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலம், போலியோ பாதிப்பு இந்தியாவில் வெகுவாகக் குறைந்தது. உலக அளவில் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்ட சுகாதாரத் திட்டங்களில் ஒன்று இது.

இந்தியாவை போலியோ இல்லாத நாடாக 2015இல் உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ், 0-5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து தற்போதும் வழங்கப்படுகிறது. போலியோ வைரஸ் தடுப்பூசியை அறிமுகப்படுத்திய உலகின் முதல் நாடு என்கிற பெருமையையும் இந்தத் திட்டம் இந்தியாவுக்குப் பெற்றுக்கொடுத்தது. கடைசியாக 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்கத்தில் போலியோ பாதிப்பு பதிவானது. கடந்த பத்து ஆண்டுகளில் போலியோ பாதிப்பற்ற நாடாக இந்தியா விளங்குகிறது. தமிழ்நாட்டு கடந்த 18 ஆண்டுகளாக போலியோ இல்லாத மாநிலமாக விளங்குகிறது.

- ஹுசைன்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x