Published : 24 Aug 2022 08:55 AM
Last Updated : 24 Aug 2022 08:55 AM

ப்ரீமியம்
சுதந்திரச் சுடர்கள் | பிறந்தது இந்தியக் குடியரசு! - ‘தி இந்து’ பதிவுகள்

இந்தியக் குடியரசின் தொடக்கம் - இந்நாட்டு மக்கள் மீதான உயர் நம்பிக்கையின் மீதான செயல்பாடு; நாட்டின் அனைத்து வளங்களையும் திறமையையும் பயனுள்ள நோக்கங்களுக்காக அர்ப்பணிக்கும் நடவடிக்கை. தன்னுடைய வலிமை, செயல்திறனை நாட்டுக்கு அதிகபட்சமாக அளித்து நாட்டின் பெருமையைக் காப்போம் என்ற உறுதிமொழியை மக்கள் எடுத்துக்கொள்வதை மறைமுகமாக வலியுறுத்துவதுதான் குடியரசு அறிவிப்பு. கவனச் சிதறலுக்கு ஆளாகிவிட்ட உலகுக்கு, தேவைப்படும்போது தனது ஆற்றலை ஒன்றுதிரட்டிச் செயல்பட்டு, அபயமளிக்கக் கூடிய நாடுதான் இந்தியா என்பதை உணர்த்தவே குடியரசாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நம்முடைய அரசமைப்பு ஜனநாயகக் குடியரசை உருவாக்கும் நோக்கம் கொண்டது. அதில் தனிநபரின் சுயம், கூட்டு உறுதிப்பாட்டில் கரைந்துவிடாது, மாறாக அதை தொடர்ந்து வளர்த்தெடுக்கும். அத்தகைய அரசியல் ஏற்பாட்டில் யாருமே ஊன்றுகோலுடன் நடை போட வேண்டிய அவசியம் இருக்காது. பொதுப் பிரச்சினையில் நான் கவலைப்பட ஏதுமில்லை என்று எவரும் ஒதுங்கிவிடவும் முடியாது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x