Published : 21 Aug 2022 07:29 AM
Last Updated : 21 Aug 2022 07:29 AM

ப்ரீமியம்
அஞ்சலி | செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயண் ஸ்வாமி...

பிரபல தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயண் ஸ்வாமி காலமாகிவிட்டார் (87). இந்தச் செய்தியை சரோஜ் நாராயண் ஸ்வாமி வாசித்தால் எப்படி இருக்கும் எனத் தோன்றுகிறது. தன் உணர்வுகளைச் செய்தி வாசிப்பில் வெளிப்படுத்தாமல், அகில இந்திய வானொலியின் முத்திரையுடன் அவர் வாசிக்கும் செய்தி, மனதுக்குள் ஒலிக்கிறது.

என்ன செய்தியாக இருந்தாலும் உணர்வுகளை வெளிப்படுத்த மாட்டார். ஆனால், அந்தச் செய்தியின் இயல்புக்கேற்ற உணர்வுகளைக் கேட்பவர் இதயங்களில் பாயச் செய்யும் வல்லமை அவர் குரலுக்கு உண்டு. நெருக்கடி நிலைப் பிரகடனம் போன்ற செய்தியை அவர் வாசித்தபோது, அவரே அந்த நெருக்கடி நிலையைப் பிரகடனப்படுத்தியது போன்ற உணர்வு உண்டானது. சிறந்த தமிழ் உச்சரிப்பு, குரலில் ஏற்ற இறக்கம், கம்பீரமான குரல் என அவரது செய்தி வாசிப்பானது தனித்துவம் வாய்ந்தது. அயல் மொழி சார்ந்த வார்த்தைகளையோ பெயர்களையோ உச்சரிக்கிறபோது அந்த மொழிக்குரியவர்களிடம் கேட்டு, அதே மொழியின் ஒலித் தன்மையோடு அந்த வார்த்தையை அவர் உச்சரிப்பார். செய்தியை வழங்கும் தன்மையிலேயே செய்தியின் நம்பகத்தன்மை முழுமையாகப் பிரதிபலிக்கும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x