Published : 14 Aug 2022 11:00 AM
Last Updated : 14 Aug 2022 11:00 AM
சுதந்திரத்துக்குப் பிறகு இந்தி சினிமா நேருவிய சோஷலிஸம் என்கிற கருத்தியலுக்குக் குரல் கொடுத்தது. நேருவின் இந்தக் கருத்துகளே ‘மதர் இந்தியா’ (1957), ‘நயா தவுர்’ (1957) போன்ற படங்களின் கதையாடல்களை இயக்கும் விசை எனலாம். நிலக்கிழார் ஒருவர் மூலம் அந்தக் காலகட்டத்திய நிலையை ‘மதர் இந்தியா’ சித்தரிக்கிறது. ‘நயா தவு’ரின் இறுதிக் காட்சியில் மாட்டுவண்டிக்கும் பேருந்துக்குமான போட்டியின் வழியாக மரபையும் நவீனத்துவத்தையும் இணைத்த புதிய இந்தியா என்ற நேருவின் கருத்தை இந்தப் படம் பறைசாற்றியது.
தமிழ் சினிமா காங்கிரஸ் கட்சியை ஆரியப் பண்பாட்டு மேலாதிக்கத்தின் குறியீடாகப் பார்த்தது. உதாரணத்திற்கு, மு.கருணாநிதி எழுத்தில் வெளியான ‘பராசக்தி’யில் சுதந்திர இந்தியாவில் கால் பதிக்கும் குணசேகரன் (சிவாஜி கணேசன்) முதலில் காண்பது தன்னைச் சூழும் பிச்சைக்காரர்களைத்தாம். தனது அன்புத் தங்கை கல்யாணி பூசாரியின் வக்கிர உணர்வுகளால் கோயிலுக்குள்ளேயே மானபங்கத்திற்கு உள்ளானதை அறிந்து அவன் வெகுண்டெழுகிறான். ‘திரும்பிப்பா’ரில் நேரடியாக நேரு திராவிட நாடு கோரிக்கையை நிராகரித்ததை ‘நான்சென்ஸ்’ என்று எள்ளிநகையாடுவதைக் காணலாம். இந்தி சினிமா நேரு மூலமாகச் சுதந்திர இந்தியாவின் பொற்காலத்தில் கொண்டிருந்த நம்பிக்கை 1950, 60-களின் படங்களில் தொடர்ந்தது. பின்னர் நம்பிக்கை இழந்து, 1970-களில் நெருக்கடிநிலையுடன் அந்தப் போக்கு முடிவுக்கு வந்தது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT