Published : 10 Jul 2022 06:15 AM
Last Updated : 10 Jul 2022 06:15 AM
தமிழின் முதல் மகளிர் இதழைத் தொடங்கியவர் பற்றிய குறிப்பை ஆங்கில நூல் ஒன்று தருவது வேடிக்கைதான். நாட்டின் முதல் ஆங்கில மகளிர் இதழைத் தொடங்கி நடத்திய கமலா சத்தியநாதனின் கணவர் சாமுவேல் சத்தியநாதனின் உதவியுடன் வெளியான ‘இந்திய கிறிஸ்தவர்களின் வாழ்க்கை வரலாறு’ (1896) நூலில், நீண்ட காலப் புதிர் ஒன்றுக்கான விடை கிடைத்திருக்கிறது. 1865இல் மதராஸிலிருந்து வெளிவந்த ‘அமிர்தவசனி’ மகளிர் இதழை நிறுவி, அதன் ஆசிரியராகப் பல ஆண்டு காலம் செயல்பட்டவர் ‘மதராஸ் மிஷனரி’ ஆர்.எம்.பாபுவின் மனைவி தபிதா பாபு (1845-1890) என்கிறது இந்நூல்.
தமிழ் நூல் விவரணை அட்டவணை நூலில் (1865), ‘1865ஆம் ஆண்டு மதராஸில் ஆச்சரியமூட்டும் வகையில் ‘அமிர்தவசனி’ எனப் பெயரிடப்பட்ட படக்கதைகள் கொண்ட இதழ் ஒன்று இந்துப் பெண்களுக்கெனத் தொடங்கப்பட்டது. இதில் எழுதியோர் பெரும்பாலும் உள்நாட்டுக் கிறிஸ்தவப் பெண்கள்’ எனப் பதிவுசெய்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT