Published : 03 Jul 2022 06:00 AM
Last Updated : 03 Jul 2022 06:00 AM
தமிழின் மூத்த எழுத்தாளர் அகிலனின் எழுத்துப் பயணம், நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் அவரது கதைகளை, விடுதலைக்குப் பிந்தைய புதிய இந்தியக் காலகட்டக் கதைகள் என வரையறுக்கலாம். சுதந்திரம்பெற்ற ஒரு நாட்டின் லட்சியக் கனவுகளையும் யதார்த்த நிலையையும் அகிலனின் கதைகளுடன் இயல்பாகத் தொடர்புபடுத்த முடியும். விடுதலை அடைந்த சில ஆண்டுகளுக்குப் பிந்தைய கதையான ‘எங்கே போகிறோம்?’ நாவலில், இந்தச் சிக்கலை அகிலனே பேசியிருக்கிறார்.
சமூகம், குடும்பம், காதல், புரட்சி, பயணம், வரலாறு எனப் பலவிதமான தளங்களில் அகிலன் கதைகளை எழுதியுள்ளார். எந்தத் தளத்தில் எழுதினாலும், வாசிப்புச் சுவாரசியம் அவரது கதைகளின் அடிப்படை நோக்கமாக இருந்தது. புதிய பின்னணியை, புதிய நிலப்பரப்புகளைத் தன் கதைகளுக்காக அகிலன் தேடிக் கண்டடைந்ததும் இந்தப் பின்னணியிலேயே நடந்தது. ‘நெஞ்சினலைகள்’ நாவல் நேதாஜியின் இந்திய தேசிய ராணுவ முகாம் பகுதிகளைப் பின்னணியாகக் கொண்டது. மலேசிய ரப்பர் தோட்டத்தைப் பின்னணியாகக் கொண்ட ‘பால்மரக் காட்டினிலே’ நாவலை, நேரில் கள ஆய்வு நடத்திய பிறகே அகிலன் எழுதியுள்ளார். இந்தக் கதைக்குள் காதல், குடும்பம், தொழிலாளர் போராட்டம், சமூகம் என உள்ளும் புறமுமாகப் பல அம்சங்களைச் சொல்லியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT