Published : 26 Jun 2022 07:44 AM
Last Updated : 26 Jun 2022 07:44 AM

ப்ரீமியம்
ஹாரி பாட்டர் 25 | ஹாரி பாட்டர் தலைமுறை நாம்!

நிவேதிதா லூயிஸ்

மனித வாழ்க்கை கடினமானது; சிக்கல்கள் நிறைந்தது. உண்மை வாழ்வின் கொடூரங்களிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ள, எங்கோ கனவுகளில் ஒளிந்துகொள்ள முயன்றுகொண்டே இருக்கிறோம். 2,700 ஆண்டுகளுக்கு முன்பே மகாகவி ஹோமர் அப்படியான ஒரு மாயக் கனவுலகத்தை மனிதர்களுக்கு அறிமுகப்படுத்தினார். அது – அட்லாண்டிஸ். அவருக்குப் பின் அந்த உலகை கிமு 4-ம் நூற்றாண்டில் விரிவுபடுத்தி பிளேட்டோ எழுதினார்.

கடவுள் பாதி, மனிதன் பாதியென விந்தையானவர்கள் ‘வாழ்ந்த’ பிளேட்டோ வர்ணித்த அட்லாண்டிஸ் தீவு, பல காலம் கிரேக்கர்களின் மாய உலகமாக இருந்தது. அக்காடிய மொழியில் எழுதப்பட்ட ‘கில்கமெஷ்’ காப்பியத்திலும் ஃபேன்டஸி உலகம் ஆங்காங்கே எட்டிப் பார்த்தது. பிற உலக நாடுகள் மட்டுமல்லாமல், இந்தியாவிலும் மகாபாரதம், ராமாயணம் போன்ற ஃபேன்டஸி கதைகள் மக்கள் மனங்களைக் கொள்ளைகொண்டன. ஒவ்வொரு நூற்றாண்டிலும் இவ்வாறான கதைகள் சொல்லப்பட்டே வந்துள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x