Published : 19 Jun 2022 07:01 AM
Last Updated : 19 Jun 2022 07:01 AM

ப்ரீமியம்
அஞ்சலி | கு.சின்னப்பபாரதி என்னும் தனித்துவம் மிக்க படைப்பாளி

மூத்த படைப்பாளி கு.சின்னப்பபாரதி, கடந்த13.06.2022 அன்று நாமக்கல்லில் காலமானார். 1935-ல் அன்றைய சேலம் மாவட்டம் பொன்னேரிப்பட்டி கிராமத்தில் பிறந்த சின்னப்பபாரதி, இளம் வயதிலேயே கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் தன்னை இணைத்துக்கொண்டார். ‘தாகம்’, ‘சங்கம்’, ‘சர்க்கரை’, ‘பவளாயி’, ‘தலைமுறை மாற்றம்’, ‘சுரங்கம்’, ‘பாலைநில ரோஜா’ ஆகிய நாவல்களை எழுதினார். 13 மொழிகளில் அவருடைய நாவல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

இவற்றையெல்லாம் தாண்டி அவரை நினைவுகூர இன்னொரு முக்கியமான முகம் அவருக்கு உண்டு. அது நாட்டுப்புறவியல் சார்ந்த அவரது ஆர்வமும் பங்களிப்பும். இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்து, முசோலினியால் சிறையில் அடைக்கப்பட்ட அந்தோனியோ கிராம்ஷி நாட்டுப்புற வழக்காறுகளின்மீது மார்க்ஸியர்களின் கவனத்தைத் திருப்பினார். உழைக்கும் மக்களின் ‘வாழ்க்கைக் கண்ணோட்டம்’ நாட்டார் வழக்காறுகளில் பொதிந்திருப்பதாகவும் முற்போக்கு மற்றும் பிற்போக்குக் கருத்துகளின் அருங்காட்சியகமாக அவை இருப்பதாகவும் கிராம்ஷி குறிப்பிட்டார். 1961-ல் ஜீவாவின் முன்முயற்சியில் கோவையில் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றபோது, நாட்டுப்புற இலக்கியங்களைச் சேகரிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழுவின் தலைவராக நா.வானமாமலையும் அதன் உறுப்பினர்களாக கு.சின்னப்பபாரதி, ‘டேப்’ சடையப்பன், வாழப்பாடி சந்திரன், எஸ்.எஸ்.போத்தையா, சிவகிரி எஸ்.எம்.கார்க்கி, டி.மங்கை ஆகியோர் இருந்தனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x