Last Updated : 03 Jun, 2022 06:58 AM

 

Published : 03 Jun 2022 06:58 AM
Last Updated : 03 Jun 2022 06:58 AM

ப்ரீமியம்
எழுத்தாளர் கருணாநிதி!

மக்கள் தலைவர்களில் ஒருவராக எதிர்க்கட்சிகளாலும்கூட தவிர்க்க முடியாதவர் மு.கருணாநிதி. மாற்றுக் கருத்து கொண்டவர்களாலும் வியந்து போற்றப்படுபவர். மிக இளம் வயதிலேயே ‘வெற்றிகரமான’ திரைப்படக் கதை வசனகர்த்தாவாக நிலைபெற்றவர். அரசியல், இதழியல், திரைப்படம் என்று ஒவ்வொரு துறையிலும் அவரது வெற்றிகள் முன்னுதாரணங்களாகக் கருதப்படும் நிலையிலும், பல்வேறு வகைமைகளில் 173 நூல்களை எழுதியிருக்கும் அவரை ஓர் எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் ஏற்றுக்கொள்வதில் நிலவிவரும் தயக்கம் விவாதத்திற்குரியது.

ஒரு பக்கம், கருணாநிதியின் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்க்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. பல்கலைக்கழகங்கள் போன்ற நிறுவனங்கள் அரசின் ஆதரவை எதிர்பார்த்துக் காத்திருப்பவை என்பதால், அந்த மொழிபெயர்ப்புத் திட்டங்களுக்குப் பின் தெளிவான அரசியல் நோக்கங்களும் உண்டு. இன்னொரு பக்கம், கருணாநிதி என்றாலே அவரை அரசியல் தலைவர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் அடைத்துவிட்டு அவரது இலக்கிய ஆக்கங்கள் அனைத்தும் பிரச்சார ஊடகங்கள், சமகால இலக்கியப் போக்கிலிருந்து விலகி நிற்பவை என்று முத்திரை குத்திவிட தனிநபர் இயக்கங்கள் முயல்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x