Published : 01 Jun 2022 07:34 AM
Last Updated : 01 Jun 2022 07:34 AM

ப்ரீமியம்
இலங்கையில் எல்லோரையும் போய்ச் சேருமா நிதியுதவிகள்?

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அதியுச்ச பொருளாதார நெருக்கடி, அதன் இயல்பு நிலையில் பெரும் தாக்கத்தைச் செலுத்தப்போவதை முன்பே கணித்த பொருளாதார வல்லுநர்கள் உடனடியாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அப்போது அரசுக்கு ஆலோசனைகளைத் தெரிவித்திருந்தார்கள். என்றபோதிலும், அரசியல் தலைமைகள் அந்த ஆலோசனைகளைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்தன. அதன் பலனாக, இன்று பொருளாதார நெருக்கடி எனும் புயலில் சிக்கி ஓட்டை விழுந்த படகாக பெருங்கடலில் இலங்கை தத்தளித்து மூழ்கிக்கொண்டிருக்கிறது.

ஒழுங்கான பொருளாதாரக் கொள்கை வரைவை முன்வைக்காதவரை இலங்கைக்குத் தற்போதைக்கு நிதியுதவி எதுவும் வழங்கும் எண்ணம் இல்லையென்று உலக வங்கி தெரிவித்திருக்கிறது. அதனால், வாரக் கணக்கில் நிதியமைச்சர் ஒருவர் இல்லாமல் இருந்த இலங்கையில் அந்தக் குறையை நீக்க நிதியமைச்சர் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார் பிரதமர் ரணில் விக்ரமசிங்க.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x