Published : 29 May 2022 09:55 AM
Last Updated : 29 May 2022 09:55 AM

ப்ரீமியம்
கீதாஞ்சலிக்கு புக்கர் விருது

சரவணன் மாணிக்கவாசகம்

புக்கரின் இரு விருதுகளில் புக்கர் இன்டர்நேஷனல் கூடுதல் சிறப்பு. உலகெங்கிலுமிருந்து மொழிபெயர்ப்பு நூல்கள் போட்டிக்கு வருவதே முக்கியக் காரணம். இம்முறை இந்தியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட நாவல் முதல் முறையாக புக்கர் பட்டியலில் இடம்பெற்று, விருதையும் வென்றுள்ளது. கீதாஞ்சலி ஸ்ரீயின் ‘ட்டூம்ப் ஆஃப் சாண்ட்’தான் (Tomb of Sand) இந்தப் பெருமையை எட்டியுள்ளது.

கீதாஞ்சலி மணிப்பூரில் பிறந்து உத்தர பிரதேசத்தின் பல நகரங்களில் வளர்ந்தவர். சிறுகதைத் தொகுப்புகளும், நான்கு நாவல்களும் ஏற்கெனவே வெளியிட்டுள்ள கீதாஞ்சலியின் ஐந்தாவது நாவல் இது. கணவரை இழந்து, மன அழுத்தத்துக்கு ஆளாகி, படுக்கையில் விழுந்த 80 வயதுப் பெண்ணைச் சுற்றி நகரும் கதை இது. திடீரென ஒரு நாள் காணாமல் போகிறார், பின் கண்டறியப்பட்டு மகள் வீட்டுக்குப் போகிறார். பின்னொருநாள் பதின்வயது நினைவுகளை மீட்டெடுக்க பாகிஸ்தானுக்குப் (பிரிவினைக்கு முந்தைய ஒன்றுபட்ட இந்தியா) போக வேண்டும் என்கிறார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x