Published : 22 May 2022 10:19 AM
Last Updated : 22 May 2022 10:19 AM

ப்ரீமியம்
தமிழ் அழகியலின் தொன்மையும் தொடர்ச்சியும்

க.காமராசன்

இந்த நூல் பக்க அளவில் சிறியது. ஆயினும், பேசப்படும் பொருள் பரப்பளவில் மிகப் பரந்தது. உலக அளவிலான நோக்கோடு, சங்க இலக்கியம் முதல் சமகால சினிமா வரை தமிழ் நிலையில் தோய்ந்து ‘தமிழ் அழகியல்’ (Tamil Aesthetics) குறித்துப் புதிய விளக்கங்களை முன்வைக்கிறது. அது பற்றிய புதிய உரையாடல்களை முன்னெடுக்கிறது.

இந்நூலில் மொத்தம் ஐந்து கட்டுரைகள் உள்ளன. ‘நாயக - நாயகி பாவம்: கடவுட் காதல்’ என்கிற முதல் கட்டுரை ‘காமப் பகுதி கடவுளும் வரையார் / ஏனோர் பாங்கினும் என்மனார் புலவர்’ என்கிற தொல்காப்பிய நூற்பாவின் பொருளைத் தேடுகின்றது. சங்க இலக்கியத்தில் மனிதக் காதலைக் கூறும் பாடல்கள் உள்ளன; ‘கடவுட் காதல்’ பாடல்கள் இல்லை. ஆனால், மேலே எடுத்துக்காட்டிய நூற்பா ஏதோ ஒருவகையில் ‘கடவுட் காதலை’ப் பற்றி உரைக்கிறது எனப் பல்வேறு உரையாசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்நூலாசிரியர்கள் உரையாசிரியர்களின் அவ்விளக்கங்களைக் கேள்விக்கு உட்படுத்துகின்றனர். அந்நூற்பாவின் பொருள் உரையாசிரியர்கள் கூறுவது அன்று. சரியான பொருள் எதுவென்று தெளிய மேலும் ஆய்வுகள் தேவை எனக் கட்டுரையின் முடிவாகக் கூறுகின்றனர். இந்நூலின் இரண்டாவது, மூன்றாவது கட்டுரைகள் கைக்கிளை, பெருந்திணை பற்றியன. சங்க இலக்கிய ரசனையிலும் ஆய்விலும் அன்பின் ஐந்திணைப் பாடல்கள் பாராட்டிப் போற்றப்பட்டுள்ளன. ஆனால், ஒருதலைக் காமம்/காதலைப் பேசும் கைக்கிளைத் திணைப் பாடல்கள் குறித்தும், பொருந்தாத காமம்/காதலைப் பேசும் பெருந்திணைப் பாடல்கள் குறித்தும் ஆய்வுகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நிலைமை உள்ளது. கைக்கிளையையும் பெருந்திணையையும் பற்றிய வழக்கமான புரிதலுக்குப் பதிலாக, அவற்றை ஆழமாக எவ்வாறு புரிந்துகொள்வது என்பது பற்றி நீண்ட சுவையான விவாதத்தை இந்நூலாசிரியர்கள் நடத்தியுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x