Published : 20 May 2022 07:03 AM
Last Updated : 20 May 2022 07:03 AM

ப்ரீமியம்
ஊட்டமேற்றப்பட்ட அரிசி: யாருக்கு லாபம்?

அனைத்து ஏழைகளுக்கும் 2024-க்குள் ஊட்டமேற்றப்பட்ட அரிசி (Fortified rice) விநியோகிக்கப்பட உள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி கடந்த சுதந்திர நாளன்று அறிவித்தார். பொது விநியோகத் திட்டம், மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட அனைத்து அரசு நலத்திட்டங்களிலும் ஊட்டமேற்றப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை கடந்த மாதம் அனுமதி வழங்கியது. மக்களிடையே ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்குத் தீர்வாக இது முன்வைக்கப்படுகிறது. இந்த வகையில் ஆண்டுக்கு ரூ. 2,700 கோடி ரூபாய் செலவிட அரசு திட்டமிட்டுள்ளது.

ஜார்கண்ட், 26 சதவீதத்துக்கும் அதிகமான பழங்குடிகள் வாழும் மாநிலம். அந்தப் பழங்குடிகளிடையே சிக்கிள் செல் நோய், தலசீமியா போன்ற ரத்தம் சார்ந்த நோய்கள் அதிகம் காணப்படுகின்றன. ரத்த நோய் இருப்பவர்கள் ஊட்டமேற்றப்பட்ட அரிசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. (இந்திய உணவுப் பாதுகாப்பு - தரக் கட்டுப்பாட்டு ஆணையம்) ஏற்கெனவே எச்சரித்துள்ளது. ஆனால், ஜார்கண்டில் எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் அனைவருக்கும் ஊட்டமேற்றப்பட்ட அரிசி விநியோகிக்கப்பட்டுவருவதாக ‘ஆஷா’ (நிலைத்த வேளாண்மைக்கான கூட்டமைப்பு-ASHA) உள்ளிட்ட அமைப்புகள் குற்றம்சாட்டியுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x