Published : 12 May 2022 07:21 AM
Last Updated : 12 May 2022 07:21 AM

ப்ரீமியம்
ஷவர்மா ஏன் அரசியலாக்கப்படுகிறது?

இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரைகூட மக்கள் அசைவ உணவுக்கு இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்ததில்லை. கிராமங்களுக்குச் சென்றால், எல்லா வீடுகளிலும் கோழி வளர்க்கப்பட்டது. விருந்தாளிகள், மருமகன்கள் வந்தால் கோழி அறுத்துக் குழம்பு வைக்கும் நடைமுறை இருந்தது. குழந்தைகளுக்கு சளித் தொந்தரவோ உடல் அசதியோ இருந்தால், கோழி சூப் வைத்துக் கொடுப்பது வாடிக்கை.

பிராய்லர் கோழி வருகைக்குப் பின் அசைவ உணவகங்கள் பெருகத் தொடங்கின. பிரியாணிக் கடைகளும் கிடுகிடுவென வளர்ந்தன. தமிழ்நாட்டு மக்களின் உணவுப் பழக்கத்தில் பெரும் மாறுதல் ஏற்பட்டது. கிராம மக்கள் நகரங்களை நோக்கி நகர்வதாலும் பாரம்பரிய உணவுகளிலிருந்து சற்று விலகி, துரித உணவை விருப்ப உணவாக மாற்றிக்கொண்டனர். வடமாநில பானிபூரி, பேல்பூரி என்ற சாட் வகைகளும் ஐரோப்பிய பீட்சா, பர்கர், வளைகுடா நாடுகளின் பாரம்பரிய உணவான ஷவர்மா, சுட்ட கோழி, மந்தி கப்ஸா போன்றவை தமிழ்நாட்டின் உணவுப் பண்பாட்டில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதோடு, பெரும் சந்தையாகவும் வளர்ந்துள்ளது. அதில் ஷவர்மா கடைகள், குறைந்த முதலீட்டில் மாலை, இரவு நேர உணவாக இளைஞர்களின் விருப்ப உணவுக் கலாச்சாரமாக வளர்ந்துவருகின்றன. எளிய மக்களின் உணவாகவும் இருக்கும் ஷவர்மா, 40 ரூபாயிலிருந்து 100 ரூபாய்க்குள் கிடைப்பதால், மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x