Published : 21 Apr 2022 06:38 AM
Last Updated : 21 Apr 2022 06:38 AM

ப்ரீமியம்
லெனின் ஏன் நமக்கு என்றும் தேவைப்படுகிறார்?

தி.மருதநாயகம்

பாரதியால் ‘ஆகாவென் றெழுந்தது பார் யுகப்புரட்சி/ கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்!’ என்று புகழப்பட்டது ரஷ்யப் புரட்சி. அந்தப் புரட்சியின் தலைவர் லெனின். ‘உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்’ என்று உரத்த குரலில் ஓங்கி ஒலித்த மார்க்ஸ், எங்கெல்ஸ் ஆகியோரின் தத்துவங்களை நடைமுறைப்படுத்தியவர் லெனின்.

1870-ம் ஆண்டு ஏப்ரல் 22-ம் தேதி பிறந்த லெனின், விளாடிமிர் இல்யீச் உல்யானவ் என்ற பெயருடன் வளர்க்கப்பட்டார். பின்னர், ரஷ்யாவில் ஓடிய லீனா நதியின் பெயரே லெனின் என்ற புனைபெயராகி, அதுவே பெயராகவும் மாறியது. தன்னுடைய இளமைக் காலத்தில், அவரது அண்ணன் அலெக்சாண்டர் மூலமாக மார்க்ஸின் நூல்களைப் படிக்கும் வாய்ப்பு லெனினுக்குக் கிட்டியது. அலெக்சாண்டர் சதிக் குற்றம்சாட்டப்பட்டு, 1887-ம் ஆண்டு மார்ச் மாதம் பீட்டர்ஸ்பர்க்கில் வைத்துக் கைதுசெய்யப்பட்டார். பின்னர், 1887-ம் ஆண்டு மே மாதம் 8-ம் தேதி அன்று அலெக்சாண்டர் தூக்கிலிடப்பட்டார். இதுவே, ஜார் சக்ரவர்த்திக்கு எதிராக லெனின் களம் இறங்குவதற்கான சம்பவமாக அமைந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x