Last Updated : 19 Apr, 2022 06:08 AM

 

Published : 19 Apr 2022 06:08 AM
Last Updated : 19 Apr 2022 06:08 AM

ப்ரீமியம்
நூறு நாள் வேலை வெட்டி வேலையா?

நூறு நாள் வேலைத் திட்டம் என்று மக்கள் சுருக்கமாக அழைக்கும், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட’த்தைப் ‘பசிப்பிணி மருத்துவன்’ என்று அழைத்தல் மிகவும் பொருத்தமானது. இதன் அடிப்படை நோக்கம், கிராமப்புற மக்களின் பசியைப் போக்குவது, ஏழைகளுக்குக் குறைந்தபட்ச கௌரவமான வாழ்வை உத்தரவாதம் செய்வது. இவை எல்லாவற்றையும்விட, உழைப்பை உரிமையாக்கிய ஒரே திட்டம் என்றும் இதைக் கூறலாம். இத்திட்டத்தின் நீண்ட கால விளைவு உழைப்பு சார்ந்த பொருளாதார வளர்ச்சி, வேளாண்மை வளர்ச்சியை முடுக்கிவிடும் சொத்து உருவாக்கம் ஆகியவை ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உறுதுணை செய்வது ஆகும். இதனை மையப்படுத்திய பல பணிகள் தண்ணீர் தொடர்பானவை. ஏரி, குளம் தூர்வாருதல், பாரம்பரிய நீர் ஆதாரக் கட்டுமானங்களைப் பராமரித்தல், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துதல், சிறுபாசன நீர்த்தேக்கங்களைப் பாதுகாத்தல், தூர்ந்துபோன நீர்நிலைகளை உயிர்ப்பித்தல், மழைநீர் சேகரிப்பு, கிராமப்புறக் குடிநீர் மேம்பாடு, கிராமப்புற சாலை வசதி, கிராம சுகாதார மேம்பாடு, மரம் வளர்ப்பது, சூழலியல் மேம்பாடு ஆகியவற்றை விரிவான பணிகளாகக் கூறலாம்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x