Published : 10 Jan 2021 03:28 AM
Last Updated : 10 Jan 2021 03:28 AM

எஸ்.ராமகிருஷ்ணனின் இலக்கியப் பேருரைகள்

தமிழின் முன்னணி எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்துக்கு வசியப்பட்டிருக்கும் வாசகர்களுக்கு நிகராக அவருடைய பேச்சுக்கும் பெருங்கூட்டம் உண்டு. அதுவும் இலக்கியப் பேருரைகள் என்றால் சொல்லவே வேண்டாம்; மெய்மறந்து கேட்கலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பாக சென்னை ரஷ்யக் கலாச்சார மையத்தில் அவர் நிகழ்த்திய ஏழு நாள் தொடர் உரைகளுக்கு மிகப் பெரும் வரவேற்பு இருந்தது. அந்த உரைகளானது புத்தகங்களாகவும் டிவிடிக்களாகவும் விற்பனையில் சக்கைபோடு போட்டன. இப்போது இந்த கரோனா காலத்தில் கிடைத்த ஓய்வு நேரத்தில் உலக இலக்கியங்களை வாசித்த எஸ்.ராமகிருஷ்ணன், புத்தாண்டு தொடங்கி ஜனவரி 7 வரை ‘ஸ்ருதி’ டிவி கபிலன் உதவியுடன் உரை நிகழ்த்தினார். ஹெர்மன் மெல்வில், ஸ்டெபான் ஸ்வேக், ஐசக் பாஷவிஸ் சிங்கர், ஈடிபஸ் அரசன், நிகோலாய் கோகோல், ஜாக் லண்டன், இதாலோ கால்வினோ ஆகியோரின் முக்கியமான படைப்புகள் குறித்த எஸ்.ரா.வின் உரைகளைக் காண: https://www.youtube.com/c/ShrutiTv

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x