அவரது கல்விப் பயணத்தில் நாட்டுப்புறவியல் துறைக்கென அணிசேர்ப்பவையாக; தொட்டில் தொடங்கி தொடுவானம் வரை, கரகாட்டம், நாட்டுப்புற மண்ணும் மக்களும், நீலகிரி மலையின் மக்கள் ஆட்டங்கள், நாட்டுப்புற இசைக்கலை, நகர்சார் நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், நாட்டுப்புற நடனங்களும் பாடல்களும், நாட்டுப்புற நிகழ்கலைகள், தமிழ் மண்ணின் மரபுக் கலைகள், சேரிப்புறவியல் தலித்தியம் என்ற நூல்களும் நாடகத் துறை சார்ந்த படைப்புகளாக; நாடக அரங்கம், தமிழ் நாடகமும் சங்கரதாஸ் சுவாமிகளும், பவளக்கொடி அல்லது குடும்ப வழக்கு, நாட்டுப்புறக் கதைகளும் நாடக ஆக்கமும், தலித் அரங்கியல், தலித் கலை கலாச்சாரம், ஒடுக்கப்பட்டோர் அரங்கியல் என்ற இயல்வடிவிலான நு£ல்களும் நாடக ஆக்கங்களாக, கனவுலகவாசி, சத்திய சோதனை, பாறையைப் பிளந்து கொண்டு, வெகுமதி, அறிகுறி, வள்ளித் திருமணம் ,கோப்பு, தொடு, மாற்றம் பலி ஆடுகள், போன்ற பல நாடகங்கள் இயக்கப்பட்டு மேடையேற்றப்பட்டன.