Published : 29 Apr 2020 08:40 AM
Last Updated : 29 Apr 2020 08:40 AM

சூடு பறக்கும் நொறுக்குத்தீனிகள் விற்பனை

ஊரடங்கை ஒட்டி நொறுக்குத்தீனிகளின் விற்பனை சக்கைப்போடு போடுகிறது. தின்பண்டங்களின் விற்பனை 50-150% வரை உயர்ந்திருக்கிறது. கூடவே பாலாடைக்கட்டி, வெண்ணெய், நூடுல்ஸ் விற்பனையும் அதிகரித்திருக்கிறது. அமுல் நிறுவனத்தின் வெண்ணெய், பாலாடைக்கட்டி போன்ற பொருட்களின் விற்பனை 30%-40% அதிகரித்திருப்பதாக அந்த நிறுவனம் தெரிவிக்கிறது.

மக்கள் வீட்டுக்குள்ளே முடங்கிக் கிடப்பதால், விதவிதமாகச் சமைத்து உண்ணும் ஆரோக்கியமான போக்கு ஒருபக்கம் அதிகரித்திருந்தாலும், இன்னொரு பக்கம், மாலை வேளைகளில் நொறுக்குத் தீனி தின்பதும் அதிகமாகியிருக்கிறது. ஒருபுறம், கரோவை எதிர்கொள்வதற்குப் போதிய ஊட்டச்சத்துமிக்க உணவின்மையால் ஒரு பெரும் கூட்டம் அல்லாடுகிறது என்றால் அதீத சாப்பாடு, நொறுக்குத்தீனி என்று ஊளைச்சதையோடு இன்னொரு கூட்டம் அல்லாடும்போல் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x