Published : 27 Apr 2020 08:09 AM
Last Updated : 27 Apr 2020 08:09 AM

ஜிம்பாப்வேயில் இருமுனைத் தாக்குதல்

ஜிம்பாப்வே இரண்டு முனைகளில் போராடிக்கொண்டிருக்கிறது. ஆம்! அங்கே மலேரியா பெருந்தொற்றும் ஏற்பட்டிருக்கிறது. 1.35 லட்சம் பேருக்கு மலேரியா தொற்று ஏற்பட்டிருக்கிறது. வெப்பமும் ஈரப்பதமும் கொண்ட பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில்தான் ஜிம்பாப்வேயில் மலேரியா போன்ற தொற்றுக்கள் ஏற்படும். ஏற்கெனவே, வறுமையில் வாடிக்கொண்டிருக்கும் அந்த நாட்டில் கடந்த இருபதாண்டுகளாக மருத்துவக் கட்டமைப்பும் சீர்குலைந்துபோயிருக்கிறது. இந்த நிலையில் கரோனா, மலேரியா என்று இரண்டு பக்கத் தாக்குதல் அங்கு ஏற்பட்டிருக்கிறது. மலேரியா மட்டுமல்ல; எய்ட்ஸ், காசநோய் ஆகியவையும் அங்கே அதிகம் பேரைக் கொல்லும் நோய்கள். செய்வதறியாது தவிக்கிறது ஜிம்பாப்வே.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x