Published : 18 Mar 2020 07:43 AM
Last Updated : 18 Mar 2020 07:43 AM

வீட்டிலிருந்தே வேலை பார்க்கலாம்

கரோனா உலகமெங்கும் உள்ளோரின் அன்றாடத்தை வெகுவாகப் பாதித்திருக்கிறது. பல நாடுகளின் நெரிசல் மிகுந்த இடங்களும் சாலைகளும் வெறிச்சோடிப்போயிருக்கின்றன. அது மட்டுமல்லாமல், பெரும்பாலானோரின் பணி வாழ்க்கையிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமேஸான், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பலரையும் வீட்டிலிருந்து பணிபுரியும்படி கேட்டுக்கொண்டிருக்கின்றன.

இந்தியாவில் ஃபிளிப்கார்ட், பவுன்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலிவர், பேட்டீஎம் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களில் பலரையும் வீட்டிலிருந்து வேலைசெய்யும்படி பணித்திருக்கின்றன. கணினியும் இணையமும் இதைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. வீட்டிலிருந்து அலுவலகம் சென்று வருவதற்குப் பலருக்கும் ஒரு மணி நேரம் முதல் ஐந்து மணி நேரம் வரை செலவாகும். மிச்சமாகும் இந்த நேரத்தைத் தற்போது குடும்பத்தினருடன் செலவிடுவதால் பணியாளர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் மகிழ்ச்சிகரமான ஒரு சூழல் ஏற்பட்டிருக்கிறது. அதிக நேரம் குடும்பத்துடன் இருப்பது, அதே நேரத்தில் வேலையும் பார்ப்பது என்று ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பணியாளர்களின் பணித்திறன் அதிகரிப்பு, அலுவலகத்தில் பணியாளருக்கு ஏற்படுத்தித் தர வேண்டிய வசதிகளில் மிச்சம் போன்றவற்றால் நிறுவனங்களுக்கும் லாபம். ஆம், ஒரு நெருக்கடியான நிலைதான் மாற்று யதார்த்தங்களுக்கு வழிவகுக்கிறது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x