வனப்பேச்சி: சமூகத்தின் மனசாட்சி

வனப்பேச்சி: சமூகத்தின் மனசாட்சி
Updated on
2 min read

சென்​னைக் ​கலைக்​குழு​வின் தயாரிப்​பில், பிரளயன் நெறி​யாளுகை​யில், நவம்​பர் 2ஆம் நாள் சென்னை மியூசிக் அகாதெமி​யில் அரங்​கேற்​றம் செய்​யப்​பட்​டது ‘வனப்​பேச்​சி’ (பேரண்​டச்​சி) நாடகம். இங்கு பெரும்​பாலும் வென்​றவர்​களே கதை சொல்​லிகள்; வீழ்ந்​தவர் கதையைக்​கூட வென்​றவர்​கள்​தான் சொல்லி வரு​கிறார்​கள். இதற்கு மாற்​றாக, வீழ்ந்​தவர் கதையை வீழ்ந்​தவரே சொன்​னால் என்ன ஆகும் என்ற சிந்​தனை​யில், மகா​பாரத, ராமா​யாணக் கதைகளை ஏகலை​வனது பார்​வை​யில் மறு​வாசிப்பு செய்​து, ‘உபகதை’ என்​கிற நாடகத்தைத் தமிழுக்கு அளித்​தவர் பிரளயன். அவ்​வரிசை​யில் தற்​போது அளித்​துள்ள நாடகம்​தான் ‘வனப்​பேச்​சி’.

தனி​யார் உயர்​நிலைப்​பள்ளி ஒன்​றின் மாணவர்​கள், வன விலங்​கு​கள் சரணால​யம் ஒன்​றிற்கு திட்ட ஆய்​வுக் கல்விக்​காக செல்​வதுடன் நாடகம் தொடங்​கு​கிறது. வனத்​தில் புலிக்​குட்​டிகளைக் கண்ட மாணவன் சதீஷ், புலிக்​குட்​டிகளை அரு​கில் பார்க்​கும் ஆவலில் புலிகள் பதுங்கி இருக்​கும் பாறை மீது கல் எறிகிறான். வனச்​சட்​டப்​படி இது குற்​றம் என்​ப​தால், அம்​மாணவரை​யும் உடன் வந்த ஆசிரியர்​களை​யும் அழைத்து அதி​காரி விசா​ரிக்​கிறார். குற்​றம் செய்​தவர் மீது நடவடிக்​கைகள் இருக்​குமென​வும் எச்​சரித்து அனுப்​பு​கிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in