குவாண்டம் உலகத்தைக் கூடுதலாக நெருங்கும் அறிவியல் | நோபல் 2025 - இயற்பியல்

ஜான் மார்ட்டினிஸ், மிஷேல் டெவோரே, ஜான் கிளார்க்
ஜான் மார்ட்டினிஸ், மிஷேல் டெவோரே, ஜான் கிளார்க்
Updated on
3 min read

ஒரு பந்தைச் சுவரின் மீது எறிந்தால், அந்தப் பந்து மீண்டும் உங்கள் பக்கமே திரும்பிவரும் தானே? ஒரு குவாண்டம் துகளைச் சுவரின் மீது எறிந்தால், அது சுவரில் பட்டுத் திரும்ப வரலாம். இல்லையென்றால், சுவரை ஊடுருவி மறுபக்கம் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. இந்தப் பண்புக்கு குவாண்டம் ஊடுருவல் (quantum tunneling) என்று பெயர். இப்படியாக, குவாண்டம் துகள்களின் பண்புகள் விந்தையானவை.

எலெக்ட்ரான்கள், போட்டான்கள் போன்ற பொருட்கள் குவாண்டம் துகள்கள். ‘ஒன்றிரண்டு’ எலெக்ட்ரான்கள், போட்டான்களில் மட்டுமே குவாண்டம் விளைவுகள் நடைபெறும் என்று அறிவியலாளர்கள் முன்பு நினைத்திருந்தார்கள். ஆனால், லட்சக்கணக்கான குவாண்டம் துகள்களைக் கொண்ட பேரளவிலான (macroscopic) நிலையிலும், குவாண்டம் விளைவுகள் சாத்தியம் என்பதை இந்த ஆண்டின் நோபல் விருதாளர்களான ஜான் கிளார்க் (John Clarke), மிஷேல் டெவோரே (Michel Devoret), ஜான் எம். மார்ட்டினிஸ் (John M. Martinis) ஆகிய மூவரும் நிரூபித்திருக்கிறார்கள்.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in