

நாட்டில் அவசர நிலை காலகட்டம் முடிவுக்கு வந்த பின்னர், 1970களில் இந்திய உச்ச நீதிமன்றம் எளிய மக்கள் நல்வாழ்வுக்கான பல முக்கிய தீர்ப்புகளை வழங்கியது. குறிப்பாக, ‘பொது நல வழக்காடுதல்’ என்னும் சட்டவியல் தத்துவத்தை நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் அறிமுகப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து நீதிபதி பி.என். பகவதி, பொது நல வழக்குகளில் ஏராளமான முக்கியத் தீர்ப்புகளை வழங்கினார்.
பாதிக்கப்பட்ட நபர் மட்டுமே நீதிமன்றத்தை அணுக முடியும் என்னும் சட்ட வழக்கத்தை மாற்றி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக யார் வேண்டுமானாலும் பொது நல வழக்கு தாக்கல் செய்யலாம் என்னும் சட்ட வகையை நீதிபதி பகவதி உருவாக்கினார்.