

உலக வரலாற்றில் அவ்வப்போது சில மேதைகள் தோன்றி மானுட குலம் பற்றிய நம் புரிதலில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றனர், சார்லஸ் டார்வினைப் போல. அப்படிப்பட்ட ஓர் அறிவியலாளர்தான் அண்மையில் காலமான ஜேன் குடால் (Jane Goodall).
விலங்குகள் புலன் உணர்ச்சிகள் கொண்டவை. பயம், மகிழ்ச்சி, துயரம் போன்ற உணர்வுகள் அவற்றுக்கும் உண்டு என்று சொன்னவர். அந்த விழிப்பு அவருக்குத் தோன்றியவுடன் மரக்கறி உணவுக்கு மாறினார். இவரது அவதானிப்புகள் விலங்குகள் பற்றி நாம் கொண்டிருந்த பார்வையைப் பெருமளவு மாற்றின.