

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அண்மையில் வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியாவில் பதிவான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 7.2% அதிகரித்திருப்பது, தெரியவந்துள்ளது.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களுடனும் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், சிறார், பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.