

திரைப்படத் துறையில் சாதனைக்குரிய பங்களிப்புச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தாதா சாகேப் பால்கே விருதை மோகன்லால் பெற்றிருக்கிறார். மலையாளத் திரைப்படக் கலைஞர் ஒருவர் இந்த விருதைப் பெறுவது இது இரண்டாவது முறை. 2004இல் இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கப்பட்டது.
இரண்டு முறையும் விருதுகள் ஏகோபித்த ஆமோதிப்புக்கு உரியனவாக இருந்தன. மோகன்லாலுக்கு வழங்கப்பட்டிருக்கும் விருது மலையாளத் திரையுலகின் பெரும் கொண்டாட்டத்துக்கும் காரணமாகி இருக்கிறது. எளிய ரசிகர்கள் முதல் கறாரான விமர்சகர்கள்வரை அனைத்துத் தரப்பினராலும் மகிழ்வுடன் வரவேற்கப்படுகிறது.