எஸ்​.எல்​.பைரப்பா: கன்னடத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர்

எஸ்​.எல்​.பைரப்பா: கன்னடத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர்
Updated on
2 min read

தில்​லியைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறு​வனம் கடந்த நூற்​றாண்​டின் எண்​பதுகளில் ‘ஆதான் பிர​தான்’ என்​னும் திட்​டத்​தின் கீழ் இந்​திய மொழிகளில் எழுதப்​பட்ட நாவல்​களில் தலைசிறந்​த​தாக விளங்​கிய செவ்​வியல் நாவல்​களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளி​யிட்​டது. அவ்​வகை​யில் பத்​துக்​கும் மேற்​பட்ட பிறமொழி நாவல்​கள் தமிழில் வெளிவந்​தன. 1987இல் எச்​.​வி.சுப்​பிரமணி​யன் என்​பவரின் மொழிபெயர்ப்​பில் வெளிவந்த ‘ஒரு குடும்​பம் சிதைகிறது’ என்​னும் நாவலும் அவற்​றில் ஒன்​று.அதன் மூல ஆசிரியர் கன்னட மொழி​யின் தலைசிறந்த எழுத்​தாள​ரான எஸ்​.எல்​.பைரப்​பா. தமிழ்ச்​சூழலில் அவருடைய அறி​முகம் அப்​போது​தான் தொடங்​கியது.

அந்த நாவலில் இடம்​பெற்​றிருக்​கும் கதை​மாந்​தர்​கள் மிகமிக எளிய​வர்​கள். ஆனால் சிக்​கலான மனப்​போக்கை உடைய​வர்​கள். எல்​லாம் எனக்​குத் தெரி​யும் என்​கிற மனப்​போக்கு கொண்​ட​வர்​கள் சிலர். ஒரு வேலை​​யும் செய்​யாமல், வேளாவேளைக்கு சாப்​பாடுத்தன்​னைத்தேடி வரவேண்​டும் என்​கிற மனப்​போக்கு கொண்​ட​வர்​கள் வேறு சிலர். எப்​போதும் பிறரை ஏமாற்​றி​யும் வஞ்​சித்​தும் பிழைக்​கிற மனப்​போக்கு கொண்​ட​வர்​கள் இன்னும் சிலர். இப்​படிப்​பட்​ட​வர்​களே தாயாக​வும் பிள்​ளை​களாக​வும் உறவினர்​களாக​வும், ஒரே குடும்​பத்​தில் நிறைந்​திருக்​கிற சூழலைத்​தான் தன் நாவலில் காட்​சிப்​படுத்​தி​யிருக்​கிறார் பைரப்​பா. அவர்​களைத் தம் அன்​பாலும் கருணை​யாலும் கண்​டிப்​பாலும் நேர்ப்​படுத்தி வாழ்க்​கை​யில் முன்​னேறலாம் என்​கிற மனப்​போக்​குடன் மரு​மகளாக வரு​கிறாள் ஒருத்​தி.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in