வரதட்சிணைக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டா?

வரதட்சிணைக் கொடுமைகளுக்கு நிரந்தரத் தீர்வு உண்டா?
Updated on
3 min read

வரதட்சிணைக் கொடுமை, அதனைத் தொடர்ந்த குடும்ப வன்முறைகளால் இளம்பெண்கள் இறக்கும் செய்திகளைத் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம். அண்மையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த இளம்பெண் ரிதன்யா, வரதட்சிணைக் கொடுமை, குடும்ப வன்முறையால் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்றைய காலக்கட்டத்தில், பெரும்பாலும் நன்றாகப் படித்த, வேலைக்குச் சென்று சம்பாதிக்கக்கூடிய பெண்கள் கூட இத்தகைய விபரீத முடிவுக்குச் செல்கிறார்கள். இந்தப் பிரச்சினைக்கு எப்படித் தீர்வு காண்பது?

வரலாற்றுப் பின்னணி: புள்ளி​விவரங்​களின்படி, இந்தியாவில் 2019-2021 காலக்​கட்​டத்தில் 31.2% பெண்கள் குடும்ப வன்முறைக்கு ஆளாக்கப்பட்டுள்​ளனர். அதில் வரதட்​சிணைக் கொடுமைகள், குடும்பத்தில் பாலியல் வன்முறைகள் போன்ற​வற்றால் பாதிக்​கப்​படு​பவர்களே அதிகம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஆழமாகப் பார்த்​தால், படித்து வேலைக்குச் செல்கின்ற, பொருளா​தா​ரத்தில் பங்கெடுக்கும் பெண்களே இக்கொடுமை​களால் அதிகம் பாதிக்​கப்​படு​கிறார்கள் என்கிற தகவலும் அதிர்ச்சி​ அளிக்​கிறது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in