கடவுச்சீட்டுகளின் கதை

கடவுச்சீட்டுகளின் கதை
Updated on
3 min read

கடவுச்சீட்டு (Passport) என்பது சர்வதேச அளவில் நம் குடியுரிமை அடையாளத்தை உறுதிசெய்கிற ஆவணம். வெளிநாடுகளில் வேலைசெய்யவும் கல்வி கற்கவும் கடவுச்சீட்டு மிகவும் அவசியம். சுற்றுலாப் பயணத்துக்கும் அது முக்கியமான ஆவணம். வெளிநாட்டில் பிரச்சினைகள் ஏற்படும் சூழலில், அங்குள்ள இந்தியத் தூதரகம் நமக்கு உதவ வேண்டும் என்றால், கடவுச்சீட்டு கட்டாயம் தேவைப்படும். உள்ளூரில்கூடச் சில அரசாங்க சேவைகளைப் பெறுவதற்குக் கடவுச்சீட்டு பயன்படுகிறது.

இந்தியாவில் வழங்கப்​படும் கடவுச்​சீட்டு அட்டையின் நிறம் என்ன என்று கேட்டால், பலரும் நீலம் என்று பதில் அளிப்​பார்கள். இந்தியா மட்டுமல்ல அமெரிக்கா, கனடா, பிரேசில், அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளில் நீல வண்ணக் கடவுச்​சீட்டு​கள்தான் மக்களுக்கு வழங்கப்​படு​கின்றன. சௌதி அரேபியா, மொராக்கோ, பாகிஸ்​தான், நைஜீரியா போன்ற பல இஸ்லாமிய நாடுகள் பச்சை நிறத்தில் கடவுச்​சீட்டுகளை வழங்கு​கின்றன. நியூசிலாந்து, ஜாம்பியா போன்ற சில நாடுகள் கறுப்பு வண்ணக் கடவுச்​சீட்டுகளை வழங்கு​கின்றன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in