

கிழக்கு மற்றும் மேற்கத்திய கலாச்சார மரபுகளின் குறுக்குவெட்டுகளை ஆராயும் ராஜாராவின் ‘பாம்பும் கயிறும்’ நாவல், 1960இல் வெளியானது. டி. சி. ராமசாமி இதனைத் தமிழாக்கம் செய்திருக்கிறார்.
கர்நாடகாவைச் சேர்ந்த ராஜாராவ் பிரான்ஸின் சோர்போன் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர். காமில் மௌலி என்ற பிரெஞ்சு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவப் பேராசிரியராகப் பணியாற்றியிருக்கிறார். இவரது படைப்புகள் பெரிதும் தத்துவச் சார்பு கொண்டவை.