

இந்திய விவசாயிகளின் கனவுகளில் ஒன்று தனக்கென ஒரு பசுவை சொந்தமாக்கிக் கொள்வது. எனது பால்யத்தில் நிறைய வீடுகளில் பசு இருப்பதைக் கண்டிருக்கிறேன். நாங்களே இரண்டு பசு மாடுகள் வைத்திருந்தோம். கல்தரையில் பால்சொட்டி பிசுபிசுப்புப் படிந்திருக்கும். நுரைபொங்கும் பாலின் மணம். கைக்குழந்தைக்குப் பால் கேட்டு சிறிய கிண்ணத்துடன் வந்து நிற்கும் வண்டிக்கார சுப்பையா மகளின் துலக்கமான முகம் நினைவில் அப்படியே இருக்கிறது.
தனக்கென ஒரு பசுவை வாங்க ஆசைப்பட்ட ஏழை விவசாயி ஹோரியின் வாழ்க்கையை விவரிக்கிறது பிரேம்சந்த் எழுதிய ‘கோதானம்’ நாவல். இதனைச் சரஸ்வதி ராம்நாத் தமிழில் மொழியாக்கம் செய்துள்ளார். ஹோரி ராம் இரண்டு ஏக்கர் நிலத்தைச் சொந்தமாக வைத்துள்ள சிறிய விவசாயி. அவரது மனைவி தானியா.மகன் கோபர். இரண்டு மகள்கள். அவருக்கு ஒரேயொரு ஆசை இருந்தது. அது ஒரு பசுவை வாங்க வேண்டும்என்பது.