ராஜ் கெளதமன்: தமிழியல் ஆய்வில் தனி அடையாளம்

ராஜ் கெளதமன்: தமிழியல் ஆய்வில் தனி அடையாளம்
Updated on
3 min read

தமிழில் மறு​வாசிப்​பு, நவீனத்​துவ எழுத்​து​முறை, கோட்​பாட்டு ஆய்வு என்​கிற வகைமை​களில் தவிர்க்க முடி​யாத ஆளு​மை பேராசிரியர் ராஜ் கெளதமன். ஆய்​வு, மொழிபெயர்ப்​பு, கவிதை, புனைகதை என்று பல வடிவங்​களி​லும் எழு​தி​ய​வர். 1980களின் இறு​தி​யில் சிற்​றிதழ்​களினூ​டாகக் கோட்​பாட்டு விவாதங்​கள் மேலெழுந்தபோது அதில் பங்​கெடுத்த அவர், பின்​னாளில் இலக்​கி​யம், அரசி​யல், பண்​பாட்டு ஆய்​வு​களில் புதிய நோக்​கு​களைப் பயன்​படுத்​திப் பார்ப்​ப​தற்​கான திறப்​பு​களை வழங்​கிய​வர்​களுள் ஒரு​வ​ராக அமைந்​தார். தமிழ் இலக்​கிய ஆய்​வுச் சூழலிலும் படைப்​புச் சூழலிலும் அடர்த்​தி​யான தாக்​கத்​தைச் செலுத்​திய ராஜ் கெளதமனின் ஆய்​வுப் பங்​களிப்​பு​கள், இலக்​கி​யத் தரவு​களை அடிப்​படை​யாகக் கொண்டு எழுதப்​பட்ட பண்​பாட்டு வரலாறுகள் மீது வைத்த பார்வை மாறு​பட்​ட​தாக இருந்​தது.

அந்​தப் பார்​வை​யால் சமூகத்​தில் விளைந்​தது என்ன என்​கிற கேள்வி முக்​கிய​மானது. கோட்​பாடு​களும் தமிழியல் ஆய்​வு​களும்: கடந்த நூற்​றாண்டின் கடைசி இருபதாண்டுகளில் தமிழ் இலக்கிய, பண்பாட்டு ஆய்வாளர்கள் ஏராளமான ஐரோப்பியக் கோட்பாடுகளைத் தங்களது ஆய்வுக்குப் பயன்படுத்திக்கொண்டாலும், குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒவ்வொருவரும் தத்​தமக்​கெனச் சில கோட்​பாடு​களைத் தேர்ந்​து​கொண்​டனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in