ஆணவக்கொலையாக மாறும் சாதிப் பெருமிதங்கள்

ஆணவக்கொலையாக மாறும் சாதிப் பெருமிதங்கள்
Updated on
3 min read

ஆணவப் படுகொலை நடைபெறும்போதெல்லாம் சமூகம் துணுக்குற்று, எதையாவது செய்திட வேண்டும் என்று துடிக்கிறது. இருப்பினும் செய்வதறியாது அரசாங்கம், சட்டம் என மற்றவற்றைக் காரணமாக்கி - தலித் மக்கள் மீது அடுத்த வன்கொடுமை நடைபெறும்வரை - இயல்பான சமூக வாழ்க்கைக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது.

ஆனால், அந்த ‘இயல்பான’ சமூக வாழ்க்கை முறைதான் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு அடித்தளமிடுகிறது. சாதியச் சமூகத்தின் இத்தகைய முரண்பாடான போக்கைச் சீர் செய்யாதவரை, இப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் கண்டறிய இயலாது.

Loading content, please wait...

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in