

ஆணவப் படுகொலை நடைபெறும்போதெல்லாம் சமூகம் துணுக்குற்று, எதையாவது செய்திட வேண்டும் என்று துடிக்கிறது. இருப்பினும் செய்வதறியாது அரசாங்கம், சட்டம் என மற்றவற்றைக் காரணமாக்கி - தலித் மக்கள் மீது அடுத்த வன்கொடுமை நடைபெறும்வரை - இயல்பான சமூக வாழ்க்கைக்குள் தன்னைப் புதைத்துக்கொள்கிறது.
ஆனால், அந்த ‘இயல்பான’ சமூக வாழ்க்கை முறைதான் தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு அடித்தளமிடுகிறது. சாதியச் சமூகத்தின் இத்தகைய முரண்பாடான போக்கைச் சீர் செய்யாதவரை, இப்பிரச்சினைக்கான தீர்வுகளைக் கண்டறிய இயலாது.