கேள்விகளும் மனித வாழ்வும்

கேள்விகளும் மனித வாழ்வும்
Updated on
2 min read

கேள்விகள் கேட்கும் திறனை இழந்து விட்டோம் என்றால், நம் மனமும் சமூகமும் தேங்கிப் போய்விடும். தமிழ்ப் பண்பாட்டு வரலாற்றை நோக்கினால், கேள்விகள் எப்போதும் முன்னேற்றத்துக்கு மூலக் காரணமாக அமைந்துள்ளன. முதலில் நம் கேள்விகள் உடல் தேவைகள், வாழ்க்கை நடத்தும் வழிமுறைகள் தொடர்பாக இருந்தன - உணவு எங்கே கிடைக்கும், எப்படிப் பாதுகாப்பாக இருப்பது, யார் துணைவன் என்பன போன்ற கேள்விகள்.

சங்க இலக்கியங்களில்கூட, மனித வாழ்வின் அடிப்படைக் கேள்விகள் கவிதைகளாகவே வெளிப்பட்டுள்ளன. ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று கணியன் பூங்குன்றனார் பாடியபோது, மனித சமத்துவம் பற்றிய கேள்வியும், அதற்கான பதிலும் அடங்கியிருந்தன.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in