கவிஞர் சிற்பி 90

கவிஞர் சிற்பி 90
Updated on
2 min read

தமிழில் 60 ஆண்​டு​களாகப் படைப்​புல​கில் இருப்​போர், இரண்டு சாகித்​திய விருதுகள் பெற்​றோர், படைப்​பு​களுக்​காக பத்மஸ்ரீ விருது பெற்​றோர், சாகித்ய அகாதமி ஒருங்​கிணைப்​பாள​ரான தமிழாசிரியர், புதிய சிந்​தனை​களைப் படைப்​பில் தரும் தமிழாசிரியர், இதழ்​களின் ஆசிரியர் குழு​வில் உள்ள படைப்​பாளி​கள், தொண்​ணூறு வயதி​லும் தொடர்ந்து எழுது​வோர், மரபுக் கவிதையோடு, புதுக்​க​விதை​யும் எழுது​வோர் என்ற வகை​களில் தனித்​தனி​யாகப் பார்த்​தால் ஒவ்​வொரு வகை​யிலும் வெகுசிலரே இருப்​பார்​கள். ஆனால் இந்த வகைகள் அனைத்​தி​லும் இடம்​பெறக்​கூடிய பெரு​மைக்​குரிய​வர் கவிஞர் சிற்பி ஒரு​வரே எனலாம்.

இலக்​கிய அமைப்​பு​களோடு நட்பு பாராட்​டி, அமைப்​புக் கடந்த படைப்​பாளி​களை​யும் ஊக்​கு​வித்து வரு​வதே சிற்​பி​யின் சிறப்​பு. 1960கள் வரை பழந்​தமிழைப் பற்​றியே எழுதி வந்​தது தமிழ்க் கவிதை உலகம். இந்​நிலை​யில், பாரதி சொல்​வது போல, ‘எளிய பதம், எளிய சொற்​களில்’ உலகப் பார்​வையோடு உள்​ளூர் நடப்​பு​களை​யும் எழு​திய ‘வானம்​பாடிகள்’ எனும் கவிஞர் குழு தமிழுக்​குப் புதிய ரத்​தம் பாய்ச்​சி​யது. அதில் முதன்​மை​யானவர் சிற்​பி. ‘வானம்​பாடி’ - சிற்​றிதழ்​களைப் படித்த இளைஞர்​கள் புதி​தாய்ப் பிறந்​தனர்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in